உற்றவர் நாட்டவர் ஊரார் – இவர்க்கு
உண்மைகள் கூறி இனியன செய்தல்
நற்றவம் ஆவது கண்டோம் – இதில்
நல்ல பெருந்தவம் யாதொன்றும் இல்லை
பக்கத் திருப்பவர் துன்பம் – தன்னைப்
பார்க்கப் பொறாதவன் புண்ணிய மூர்த்தி
ஒக்கத் திருந்தி உலகோர் – நலம்
உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி
- பாரதி
No comments:
Post a Comment